புதன், 17 ஜூன், 2009

தோனியும் தோல்விகளும்....!

ஒரு போட்டி என்று வந்துவிட்டால் ஒருவர் தோற்றுத்தான் ஆக வேண்டும். அதுதான் நியதி. எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்த தோனி இப்போது அண்மைக்காலமாக சரிவுகளை சந்தித்து வருகிறார். ஒரு தொடர் தோற்றதும் இதனை சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம். தோனியை எல்லோரும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினார்கள். அப்பா நீதான் எங்கள் தெய்வம். எம்மை காக்க வந்த காவல் வீரன் என்பது போல வாழ்த்தியும் புகழ்ந்தும் தள்ளினர். ஊடகங்கள் அவரின் புகழை பலூனை ஊதி ஊதி தள்ளுவது போல பெரிதாக்கினர். இன்று வசை பொழிய தொடங்கிவிட்டனர். அதிர்ஷ்டம் தோனியை கைவிட ரசிகர்களும் கைவிட தொடங்கி விட்டார்கள் போலும். இங்கிலாந்துடனான போட்டிக்கு பின்னர் எரித்த கொடும்பாவி ரசிகர்களின் எண்ணங்களை சொல்லும்.

தோனியால் இந்தியா பல வெற்றிகளை பெற்றது. அவுஸ்திரேலியாவில் நீண்ட ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டித்தொடரை கைப்பற்றி கோப்பையை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு பின்னர் இரண்டு இறுதிப்போட்டிகளில் சொதப்பிவிட்டார். ஆனால் சில தொடர்களில் இந்தியாவிற்கு வெற்றியை குவித்தார். இப்போது நிலைமை கொஞ்சம் தலைகீழ்.

ஐபிஎல் போட்டிகளிலும் தோனியின் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் சரிந்தே இருந்தது. பின்னர் ஒருவாறாக தேறி அரை இறுதி வரை வந்தது. ஆனால் தோனியின் துடுப்பாட்டம் மந்தமாகவே காணப்பட்டது. இப்பொழுது அவரது அதிரடிகள் பெரிதாக இல்லை. காரணம் தெரியாது(பால் கிடைப்பதில்லை போலும்).
அவர் ஒரு அதிரடி துடுப்பாட்ட வீரர். அவ்வளவே. நல்ல துடுப்பாட்ட வீரரா? யோசித்துத்தான் சொல்ல வேண்டும். அவரது அடிகளை பார்ப்பவர்களுக்கு தெரியும், சிலவேளைகளில் பாடசாலை மட்ட வீரர்கள் ஆடுவது பார்க்க சிறப்பாக இருக்கும். பலம் ஒன்று உள்ளது. அது மட்டும்தான் அவருக்கு அதிக அளவில் கை கொடுக்கிறது. 20-20 போட்டிகளில் அவரின் 100 பந்துகளுக்கான ஓட்டவிகிதமும் அண்ணளவாக 100 தான். பெரிதாக துடுப்பாட்டத்தில் சாதிக்கவில்லை என்று சொல்லலாம். சில வீரர்களின் முட்டாள்தனமான முடிவு சில போட்டிகளை மாற்றி எதிரணிக்கு வெற்றியை தாரை வார்த்து கொடுக்கும். அதன்மூலம் சிலர் புகழ் அடைந்தனர் என்பதற்கு தோனியின் முதலாவது 20-20 போட்டி கோப்பை இறுதி போட்டியை சொல்லலாம். (இப்படித்தான் 1999 ல் குலூஸ்னர் பார்த்த அடி முட்டாள்தனமான செயல் தென்னாபிரிக்காவை பாதித்தது).

இந்தியாவின் பெரிய பலமே துடுப்பாட்டம்தான். அதுவும் பெரிதாக இந்த தொடரில் சோபிக்கவில்லை. தோனியோடு சேர்ந்து அவருக்கு பின்னால் இளம் அணி இளம் அணி என்று அலைந்த தேர்வாளர்கள் இனி என்ன செய்வார்கள்.

இதற்கிடையில் விரேந்தர் ஷேவாக் உடன் முறுகல் என்ற கதையும் உள்ளது. இது எவ்வளவு உண்மை என்று தெரியாது. எல்லாம் சேர்ந்து தோனியை வாட்டி வதைக்கின்றன. களத்தில் எடுக்கும் முடிவுகளில் குழப்பம். அணித்தெரிவுகளில் குழப்பம் (இதை விட நல்ல அணி எவ்வாறு எடுப்பது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) என்றெல்லாம் விமரிசனம் பலவாறாக உள்ள நிலையில் தோனி நிலை கவலைக்கிடமே. ஆனால் அவருக்கோ அவர் தலைமைப்பதவிக்கோ இப்போதைக்கு எந்த ஆபத்தும் அண்மையில் இருக்காது.

இந்த வலைப்பூக்களில் ஒரு பதிவிலே தோனிக்கு அதிர்ஷ்டம் மட்டுமே உள்ளது என்று எழுதிய ஒருவர், பின்னர் சொன்னார் இதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்னை அடிக்க வருவார்கள். ஏன் வம்பு நான் ஒதுங்குகிறேன் என்றார். அவர் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

அடுத்து மேற்கிந்திய தொடர். அதுவும் அவர்கள் மண்ணில். பார்ப்போம் சாதிப்பாரா என்று. இது ஒன்றும் தோனிக்கு எதிராக எழுதிய பதிவல்ல. ஆனால் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களுக்கான பதிவு. அவ்வப்போது தோல்விகள் வரத்தான் செய்யும். தாங்கித்தான் ஆக வேண்டும். விமரிசங்கள் கடுமையாக வரும். புகழ்ந்து புகழ்ந்து எழுதிய ஊடகங்கள் தோல்வியை சந்தித்த உடன் காலில் போட்டு மிதிப்பது போல எழுதுவார்கள். கங்குலியிடம் இருந்து இதை படிக்க வேண்டும். எனவே இந்தியா நன்றாக விளையாடக்கூடிய அணி. அவர்களைப்போல அணி உலகில் இல்லை. ஏனெனில் எப்பொழுது வெல்வார்கள். எப்பொழுது கவிழ்ப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. எதிர்பாராத நேரத்தில் அடித்து நொருக்கி ஆட்டம் போடுவார்கள். ஆனால் எதிர் பார்க்கின்ற நேரத்தில் காலை வாரிவிடுவார்கள். அதுதான் இம்முறையும் ரசிகர்களுக்கு நடந்துள்ளது.

இதுதான் கிரிக்கட். அதிலும் இதுதான் இந்திய கிரிக்கட்...!

13 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

கண்டிப்பாக நாளை கிரிகெட்
மாறும் தோழா!

ஓட்டும் போட்டாச்சு!!

ARV Loshan சொன்னது…

உங்கள் கருத்துக்களோடு முற்று முழுதாக ஒத்துப் போகிறேன்.. நல்ல அலசல்.. எல்லோரும் காவடி தூக்கியதாலேயே எனக்கும் டோனி பிடிக்காமல் போனார்.. ;)

கொஞ்சம் என் பதிவையும் பாருங்கள்..

http://loshan-loshan.blogspot.com/2009/06/blog-post_17.html

ஒரே மாதிரியான எண்ணம் எம் இருவருக்கும்.

http://loshan-loshan.blogspot.com/2009/06/blog-post_17.html

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் கலையரசன், வருகைக்கும் கருத்துக்கும். கிரிக்கட் மாறும்தான். மாறியதால்தான் இன்று இந்தியா வெளியேறியுள்ளது. நன்றி.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் லோஷன், உங்கள் வலைப்பூவை பார்த்தேன். இதை விட நன்றாகவும் விரிவாகவும் எழுதியுள்ளீர்கள். இந்தியா தோல்வி கண்டதும் ஒரு விதத்தில் மகிழ்வுதான். அவர்களும் ஏதோ தாங்கள்தான் 20-20 போட்டிக்கு பிறந்தவர்கள் என எண்ணிக்கொண்டு இருந்தார்கள். நன்றி வருகைக்கு லோஷன்.

புழுதிப்புயல் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
புழுதிப்புயல் சொன்னது…

நீங்கள் சொன்ன ஒன்று மட்டும் உண்மை..
"அவர்களைப்போல அணி உலகில் இல்லை. ஏனெனில் எப்பொழுது வெல்வார்கள். எப்பொழுது கவிழ்ப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. எதிர்பாராத நேரத்தில் அடித்து நொருக்கி ஆட்டம் போடுவார்கள். ஆனால் எதிர் பார்க்கின்ற நேரத்தில் காலை வாரிவிடுவார்கள்."
ரசிகர்களின் அபரிமிதமான எதிர் பார்ப்புத்தன் முக்கிய காரணம். உதாரணத்துக்கு 2007 உலக கோப்பை போட்டியில், இந்தியாவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கேவலம், பங்களாதேசிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது.
ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல் 20- 20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றது..(மற்றைய அணிகளின் பலவீனமும் காரணம் என்பது ஒரு வாதமாக இருப்பது வேறுவிடயம்)..
முதலில் சொன்னதை போல, வெற்றி தோல்வி என்பது விளையாடில் சகயம். தொடர்ந்து இந்தியாவே வெல்லவேண்டும் என்று எதிர் பார்ப்பது எமது முட்டாள் தனம்.

KAPILAN SIVA சொன்னது…

உங்கள் கருத்து ஒரு விதத்தில் உண்மை ஆக தான் உள்ளது.தோணி தன் பிழைகளை திருத்த வேண்டிய கலாம் வந்துவிட்டது. கங்குலி கூறியது போல இந்தியர்கள் வெளிநாட்டு மைதானங்களில் கவனமாக செயல் பட வேண்டும் எனவும் தோனிக்கு சவால்கள் வெளிநாடுகளில் தான் எனவும் சொன்னார்.இந்தியாவில் வெல்வது என்பது பெரிய விடயம் இல்லை.சென்ற தடவை உலக கோப்பை கூட சிலரது தப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

கிடுகுவேலி சொன்னது…

//..... sutharshan said...
ரசிகர்களின் அபரிமிதமான எதிர் பார்ப்புத்தன் முக்கிய காரணம். உதாரணத்துக்கு 2007 உலக கோப்பை போட்டியில், இந்தியாவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கேவலம், பங்களாதேசிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது.
....//

வணக்கம் சுதர்சன்,
ரசிகர்கள் அப்படித்தான் எதிர்பார்ப்பார்கள். இன்று இந்தியா தோக்கும் என்று என்றைக்கும் எண்ண மாட்டார்கள். எனவே களத்திலே விளையாடுபவர்கள் தங்கள் ரசிகர்களின் எண்ணங்களுக்கு அமைவாக விளையாட வேண்டும். ஆனால் ரசிகர்கள் தோல்விகளை ஏற்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதுவரை கொடும்பாவிகள் a, மைதானத்துக்குள் கல், போத்தல்கள் எறிதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். பார்ப்போம். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் கபிலன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து இந்தியா வெல்ல வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால் தோல்வியை ஏற்கும் பக்குவம் வர வேண்டும்.......!

அருண்மொழிவர்மன் சொன்னது…

எல்லா விடயங்களும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. விமர்சனத்துக்கு உட்படாதன எல்லாம் கால ஓட்டத்தில் மண்ணோடு மண்ணாகும், இது வரலாறு எமக்கு சொல்லி தந்தது. அதே நேரத்தில் தோணியின் எல்லா வெற்றிகளையும் அதிர்ஷ்டத்தால் வென்றார் என்றூ சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. அதிர்ஷ்டம் என்பது எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத வெற்றிகளுக்கு நாம் வைத்த பெயர். இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவு பல வெற்றிகளை தோணியின் தலைமையில்ம், அவராலும் பெற்றதுவே அவரது புகழை ஊடகங்கள் உயர்த்த் காரணம். அவரது சில எதிர் தரப்பு எதிர்பாராத முடிவுகள் அந்த நேரத்தில் பாராட்டப்பட்டட்ன. இப்போது அவை வெற்றியளிக்காதபோது விமர்சிக்கப் படுகின்றன. அதுதான் வித்தியாசம்.

மேலுன் தோணி நளினமான ஆட்டக்காரர் இல்லவே இல்லைதான், அதற்காக அவரது பலத்தால் தான் அவர் விளையாடுகின்றார் என்று சொல்வதும் கூட ஏற்க முடியாமல் இருக்கிறது. அலன் போடர், ரவி ஷாஸ்திரி, ஸ்ரீகாந்த், ஸ்டீவ் வா போன்றவர்கள் கூட அவர்களின் ஆட்டம் நளினமாக இல்லை என்றூ விமர்சிக்கப்பட்டவர்கள். அதிலும் அலன் போடை எண்பதுகளின் ஆரம்பத்ஹ்டில் இந்த விமர்சனங்களால் தான் “பாட்” பண்ணும்போது நிற்கும் நிலையை மாற்றி, தொடர்ந்து வீழ்ச்சிகளை கண்டபின் தன் பழைய பாணிக்கே திரும்பியது கூட குறிப்பிடத்தக்கது.

sshathiesh சொன்னது…

உண்மையில் உங்கள் பதுவு சூப்பர். ஆனால் டோனி எடுத்த சில தவறான முடிவுகளே தோல்வியின் பெரும்பான்மைக் காரணியாக அமைந்து விட்டது. டோனி ஒரு மந்திர வாதியா என நானும் ஒரு பதிவிட்டேன் அதையும் கொஞ்சம் படித்துப்பாருங்கள். நிச்சயமாக இந்தியா நல்ல வீரர்களை கொண்ட ஒரு குழு. எப்போது அவர்கள் ஒன்றுதிரண்டு அணியாக விளையாடுகிறார்களோ அன்று வெற்றி நிச்சயம்.
http://sshathiesh.blogspot.com/2009/06/blog-post_12.html

http://sshathiesh.blogspot.com/2009/05/blog-post_10.html

Kapilan சொன்னது…

உங்கள் கருத்து ஒரு விதத்தில் உண்மை ஆக தான் உள்ளது.தோணி தன் பிழைகளை திருத்த வேண்டிய கலாம் வந்துவிட்டது. கங்குலி கூறியது போல இந்தியர்கள் வெளிநாட்டு மைதானங்களில் கவனமாக செயல் பட வேண்டும் எனவும் தோனிக்கு சவால்கள் வெளிநாடுகளில் தான் எனவும் சொன்னார்.இந்தியாவில் வெல்வது என்பது பெரிய விடயம் இல்லை.சென்ற தடவை உலக கோப்பை கூட சிலரது தப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் அருண்மொழிவர்மன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தோனி எல்லா போட்டிகளையும் அதிர்ஷ்டம் மூலம் வென்றார் என்று சொல்லவில்லை. ஆம் அவர் எடுத்த சில துணிச்சலான முடிவுகள் பாராட்டுதலுக்குரியவை. அவை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. இங்கே நான் குறிப்பிட்டதெல்லாம், தோனி என்ற வீரரை பெரிய ஒரு மாயத்தோற்றத்துடன் காட்டியது. இந்தியக் கிரிக்கட் உடன் உங்களுக்கு நீண்ட காலம் பந்தம் உள்ளது. அவர்கள் அசத்துவது எப்போ சொதப்புவது எப்போ என்பதெல்லாம் தெரியாத பலரில் நாமும் அடக்கம்.

என்ன கவலை என்றால் இந்த இந்திய அணி போல் வேறு எந்த அணியும் இல்லை. அவ்வளவும் முத்தான வீரர்கள். இதைவிட நல்ல தெரிவு இருக்க முடியாது. இந்த அணி தொடர்ந்து 3 போட்டிகளில் எவ்வாறு தோற்றது. அதுதான் இங்கே சிக்கல். ஆகவே எங்கோ பிழை உள்ளது.

என்னை பொறுத்தவரை தோனி பிரவீன் குமார் என்ற வீரரை இஷான் சர்மாவிற்கு பதிலாக கொணர்ந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

நன்றி!

கருத்துரையிடுக