வியாழன், 27 நவம்பர், 2008

கண்ணுபடப்போகுதையா....!


தோனி இந்தியாவின் இப்போதைக்கு கிடைத்திருக்கும் ஒரு புதையல். தொட்டதெல்லாம் துலங்குவது போல, கிரிக்கட்டில் வெற்றிகளாக குவிக்கிறார். எங்கேயோ இருந்த இந்தியா, இன்று உச்சானிக்கொம்பில். இப்ப வையுங்கடா உலகக்கோப்பையை நாம ஜெயித்து காட்டுறோம் என்ற நிலை.


பீட்டர்சனால் இனி என்னதான் செய்ய முடியும் என்ற நிலை. இந்த தொடரில் எவராலும் எதையும் செய்ய முடியாது என்று இந்தியா நிரூபித்துள்ளது. துடுப்பாட்டமா அது 8ம் இலக்கம் வரைஇ நீளுகிறது. களத்தடுப்பா பாய்ஞ்சு பாய்ஞ்சு ஜமாய்க்கிறார்கள். பந்துவீச்சா சொதப்பியவர்கள் எல்லாம் இப்போ துல்லியம். யுவராஜ் கூட அசத்துறார்.


போங்கோடா, உங்களோட விளையாட முடியா நம்மால என இங்கிலாந்து வெளியேறினாலும் ஆச்சரியப்பட இல்லை. பிரமாதம். ஆனால் இது தொடர்ந்தும் நீடிக்க வேண்டும்.


20-20 உலகக்கிண்ணம், ஆஸ்திரேலியா விபி கிண்ணம், பாகிஸ்தான் தொடர்,இலங்கைத் தொடர், என எல்லாம் வெற்றிகளே! இடையில் ஆசியக்கிண்ணம் தவிர.


நல்ல முகமைத்துவம். களத்தடுப்புக்கு பாயும்புலி ரொபின் சிங், பந்துவீச்சுக்கு Slow Ball Specialist வெங்கடேஷ் பிரசாத், பயிற்சியாளர் கரி கிர்ஸ்டன் என எல்லோரும் ஆலோசனைகளை மைதானத்துக்கு வெளியே வழங்க உள்ளே வீரர்கள் பொழந்து கட்டுகிறார்கள்.


இந்தியர்கள் எல்லோரும் நல்ல போர்மில் உள்ளார்கள். இவர்களுக்கு முன்னால் இங்கிலாந்தின் பந்துவீச்சு எடுபடவில்லை. இந்தியர்கள் பிளிண்டொவ் இற்கு மட்டும் கொஞ்சம் மரியதை கொடுத்து விளையாடுகிறார்கள். ஆனாலும் ஓட்டவிகிதம் எகிறும் போது அவரும் வாங்கிக்கட்டுகிறார்.


சஹீர்கான் நிஜமாகவே மிரட்டுகிறார். அவரது முன்னேற்றம் அசர வைக்கிறது. ஆஸ்திரேலியர்களையே மிதித்தவர்களுக்கு அதுவும் அவர்களது கோட்டைக்குள் மற்றவர்கள் எல்லாம் காற்தூசிக்கு சமம்.


வலுவான் அணி இப்போது இந்தியா. இந்த போக்கில் போனால், ஆஸ்திரேலியர்களின் ஒன்னாம் நம்பர் கனவுக்கு ஆப்புத்தான்.


சஹீர்கான் களத்தடுப்பினை சக பந்துவீச்சாளருக்கு ஒழுங்கமைக்கும் போது தோனி வழிவிடுகிறார். மற்ற அணித்தலைவர்கள் விட்ட தவறுகளை இவர் சீர் செய்கிறார்.


ஒரு நாள் போட்டி என்று வந்துவிட்டல் தோனி நன்றாக ஆடுகிறார். அடிக்க வேண்டிய இடத்தில் முழங்கியும், ஆறுதலான் நேரத்தில் அமைதியாகவும் ஆடுகிறார். நேரத்திற்கு தகுந்த ஆட்டத்தினை இப்போது தோனி கையாளுகிறார்.


சரி இவை தொடருமா....? தொடர வேண்டும் என்பதே எல்லோர் விருப்பமும். ஆனால் இந்திய கிரிக்கட் வீரர்கள் எப்பொழுது சொதப்புவார்கள் என தெரியாது. பொறுத்த நேரத்தில் கோட்டை விட்டு விட்டு ரசிகர்களிடம் கல்லெறி வாங்குவார்கள். பார்ப்போம் வெற்றிப்பயணம் எதுவரை என. ஆஸ்திரேலியா தற்பொழுது அடங்கிவிட்டது. இவர்கள் அதை தொடர்வார்களா...? இதுதான் இப்போதுள்ள வலுவான வினா.....!

திங்கள், 24 நவம்பர், 2008

பொறுப்பற்ற ஆட்டம்....!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி நேற்று பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா டக்வேர்த்-லூயிஸ் முறையில் 19 ஓட்டங்களால் வென்றது தெரிந்ததே.

உண்மையில் இந்தியா இந்த தொடர் முழுவது நன்றாக விளையாடி வரும் நிலையில் இங்கிலாந்து அணியும் மோசமாகவே விளையாடி வருகிறார்கள்.

நேற்றைய ஆட்டம் இங்கிலாந்திற்கு வாழ்வா சாவா போட்டி. என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியிடம் இருந்த போட்டியை அவர்களாகவே இந்தியாவிடம் தாரைவார்த்துக் கொடுத்தனர்.

டக்வேர்த்-லூயிஸ் முறையில் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 198. அதுவும் 22 ஓவரில். இது ஒரு கடின இலக்குத்தான். ஆனால் 20-20 போட்டிகளில் நன்றாக பரிச்சயம் உள்ள வீரர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆரம்ப ஜோடிகள் பெல்-போபரா இணை மிக மோசமாக விளையாடியது. இதுதான் போட்டியின் திசையை மாற்றியது என நான் கருதுகிறேன். 6 ஓவரில் வெறும் 21ஓட்டங்கள் தான். பீட்டர்சன் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆரம்ப இணையின் விளையாட்டு உத்தி தாக்குதல் பாணியில் அமையவில்லை. அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். அடிக்க முனைந்து ஆட்டமிழந்தார் என்பர். ஆனால் அவர்கள் இருவரும் அந்த உத்திக்கு எத்தணிக்கவே இல்லை. போபரா ஆட்டமிழக்க பின்னால் வந்த ஓவே ஷா வும் மெதுவாகவே ஆரம்பித்தார். இவை பின்னால் வந்த வீரர்களுக்கு அழுத்தம் கூட்டுவதாகவே அமைந்தது.
அருமையான வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். இந்தியாவிற்கு 5வது பந்து வீச்சாளர் பகுதிநேரப்பந்து வீச்சாளரே. அதையும் அவர்கள் பெரிதாக பயன்படுத்தவில்லை.

பீட்டர்சன் துடுப்பாடும் போது பட்தட்டம் தெரிகிறது. அணித்தலைவர் என்ற சுமை அவரது துடுப்பாட்டத்தை இந்தத்தொடரில் வெகுவாகவே பாதித்துவிட்டது. 3ம் இலக்க வீரராக பிளிண்டொவ் இனை இறக்கி பீட்டர்சன் கொஞ்சம் பின்னாலே வந்திருக்கலாம். அவர் செய்கிறாரோ இல்லையோ ஏனைய வீரர்களுக்கு மனதில் தைரியத்தை கொணர்ந்திருக்கும்.

அதிர்ஷ்டம் இல்லை என்பதைவிட இங்கிலாந்து போட்டியில் சிறந்த திட்டமிடல் இல்லாததால் கோட்டை விட்டது. மீண்டு ஒரு வெற்றி இந்தியர்க்கு. இது தொடரை அவர்கள் வசமாக்கிவிட்டது.

மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!