திங்கள், 24 நவம்பர், 2008

பொறுப்பற்ற ஆட்டம்....!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி நேற்று பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா டக்வேர்த்-லூயிஸ் முறையில் 19 ஓட்டங்களால் வென்றது தெரிந்ததே.

உண்மையில் இந்தியா இந்த தொடர் முழுவது நன்றாக விளையாடி வரும் நிலையில் இங்கிலாந்து அணியும் மோசமாகவே விளையாடி வருகிறார்கள்.

நேற்றைய ஆட்டம் இங்கிலாந்திற்கு வாழ்வா சாவா போட்டி. என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியிடம் இருந்த போட்டியை அவர்களாகவே இந்தியாவிடம் தாரைவார்த்துக் கொடுத்தனர்.

டக்வேர்த்-லூயிஸ் முறையில் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 198. அதுவும் 22 ஓவரில். இது ஒரு கடின இலக்குத்தான். ஆனால் 20-20 போட்டிகளில் நன்றாக பரிச்சயம் உள்ள வீரர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆரம்ப ஜோடிகள் பெல்-போபரா இணை மிக மோசமாக விளையாடியது. இதுதான் போட்டியின் திசையை மாற்றியது என நான் கருதுகிறேன். 6 ஓவரில் வெறும் 21ஓட்டங்கள் தான். பீட்டர்சன் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆரம்ப இணையின் விளையாட்டு உத்தி தாக்குதல் பாணியில் அமையவில்லை. அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். அடிக்க முனைந்து ஆட்டமிழந்தார் என்பர். ஆனால் அவர்கள் இருவரும் அந்த உத்திக்கு எத்தணிக்கவே இல்லை. போபரா ஆட்டமிழக்க பின்னால் வந்த ஓவே ஷா வும் மெதுவாகவே ஆரம்பித்தார். இவை பின்னால் வந்த வீரர்களுக்கு அழுத்தம் கூட்டுவதாகவே அமைந்தது.
அருமையான வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். இந்தியாவிற்கு 5வது பந்து வீச்சாளர் பகுதிநேரப்பந்து வீச்சாளரே. அதையும் அவர்கள் பெரிதாக பயன்படுத்தவில்லை.

பீட்டர்சன் துடுப்பாடும் போது பட்தட்டம் தெரிகிறது. அணித்தலைவர் என்ற சுமை அவரது துடுப்பாட்டத்தை இந்தத்தொடரில் வெகுவாகவே பாதித்துவிட்டது. 3ம் இலக்க வீரராக பிளிண்டொவ் இனை இறக்கி பீட்டர்சன் கொஞ்சம் பின்னாலே வந்திருக்கலாம். அவர் செய்கிறாரோ இல்லையோ ஏனைய வீரர்களுக்கு மனதில் தைரியத்தை கொணர்ந்திருக்கும்.

அதிர்ஷ்டம் இல்லை என்பதைவிட இங்கிலாந்து போட்டியில் சிறந்த திட்டமிடல் இல்லாததால் கோட்டை விட்டது. மீண்டு ஒரு வெற்றி இந்தியர்க்கு. இது தொடரை அவர்கள் வசமாக்கிவிட்டது.

மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!

6 கருத்துகள்:

Athisha சொன்னது…

நல்ல பதிவு நண்பா... மேட்ச் ஒரு பக்கமாகவே ஆடப்பட்டது போலிருந்தது

பெயரில்லா சொன்னது…

///பின்னால் வந்த ஓவே ஷா வும் மெதுவாகவே///

இல்லையே
அவர் ஒருவர் தான் அதிகபட்ச ஓட்டங்களை (72) குறைவான பந்துகளில் (48) அடித்திருந்தார்

கிடுகுவேலி சொன்னது…

ஆமாம் ஓவே ஷா பின்னர்தான் அதிரடியாக ஆடினார். ஆரம்பம் சற்று மந்தமாகவே இருந்தது. ஓட்டங்கள் தேவை. தோனியை, பதானை பார்த்தீர்களா வந்து சந்தித்த முதல் பந்திலேயே ஆறு அடித்து அசத்தினர். நிலைமைக்கு ஏற்றாற்போல விளையாட வேண்டும். இல்லையேல் இங்கிலாந்து போல் தோல்வியையே சந்திக்க வேண்டும்.

நன்றி ரவி மற்றும் ஆதிஷா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

இது ஒரு நகைச்சுவையான ஆட்டம்

Kevin Matthews சொன்னது…

இந்திய அணியில் முனாப் படேல் கடைசி 2 ஓவர்களை பொறுப்பற்ற முறையில் வீசினார்.

அருண்மொழிவர்மன் சொன்னது…

short and sweet என்பார்களே அப்படி ஒரு பதிவு. நீங்கள் சொன்னதுபோல இந்தியாவின் பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து சரியாக பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவின் பலம் என்னவென்றால் யுவ்ராஜ், சேவாக், பதான், டெண்டுல்கர் என்று பல பகுதி நேர பந்தூ வீச்சாளார்காள் உள்ளனர். இது ஒரு அணிக்கு மிகுந்த பலம் தரும் ஒரு விடயம். அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகள் அவற்றின் உச்ச கட்டத்தில் இருந்தபோது அவை பந்துவீசக்கூடிய நி்றாஇய பாட்ஸ்மன்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக